நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 25 ஊர்களின் பெயர் மாற்றம்..!!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான ஊர்களின் பெயரை மாற்றியமைக்க அந்தந்த மாநிலங்கள் அவ்வப்போது மத்திய அரசுக்கு பரிந்துரைக்கின்றன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான ஊர்களின் பெயரை மாற்றியமைக்க அந்தந்த மாநிலங்கள் அவ்வப்போது மத்திய அரசுக்கு பரிந்துரைக்கின்றன. இதை பரிசீலித்து மத்திய அரசும் ஒப்புதல் அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அதன்படி ஆந்திராவின் ராஜமுந்திரி, ராஜமகேந்திரவரம் என்றும், ஒடிசாவின் வீலர் தீவு, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தீவு என்றும், கேரளாவின் அரிக்கோடு, அரீக்கோடு என்றும் பெயர் மாற்றப்பட்டு இருக்கின்றன. இதைப்போல அரியானாவின் பிண்டாரி, பண்டு–பிண்டாரா எனவும், நாகாலாந்தின் சம்புர், சன்பூர் எனவும் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்த வரிசையில் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் நகரம் மற்றும் பைசாபாத் மாவட்டத்தை முறையே பிரயக்ராஜ் மற்றும் அயோத்தி என பெயர் மாற்ற மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை ‘பங்ளா’ என மாற்றக்கோரும் மாநில அரசின் பரிந்துரையும் மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கிறது.
ஒரு இடத்தின் பெயரை மாற்றுவதற்கு ரெயில்வே அமைச்சகம் மற்றும் தபால், நில அளவைத்துறைகளின் ஒப்புதலை பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கும். ஆனால் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு நாடாளுமன்ற ஒப்புதலுடன் அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com