எஸ்எஸ்எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் நடுக்கடலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட நிலையில் இருந்த 22 பேரும் மீட்கப்பட்டனர்.
நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடலோரக் காவல்படைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதியிலிருந்து ராஜ்கிரண் என்ற கப்பலும், டார்னியர் கப்பலும் மீட்புக்கு விரைந்தன.கடலுக்கு நடுவே பற்றி எரியும் தீ, அதிக உயரத்துக்குப் புகையைக் கக்கி வருகிறது.
மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டரும் விரைந்துள்ளது. கடல் கொந்தளிப்பு, மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கப்பலில் உள்ள 22 பேர் கொண்ட குழுவில் முதற்கட்டமாக 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பின் எஞ்சியிருந்த 11 பேரும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…