தோல் பொருட்கள் தொழிற்சாலையில் தீவிபத்து..!

Default Image

மும்பையில் தோல் பொருட்கள் தொழிற்சாலையில் அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

அதை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். மும்பையின் பரீஸ்டெர்நாத் பாய் சாலை ((Barrister nath pai road)) பகுதியில் இயங்கிவரும் தோல்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறைவான அளவில் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அங்கு நின்றபடி, மற்ற பகுதிகளுக்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, தீ வேகமாக பரவியதால் ஒரு வீரர் காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சகவீரர்கள், அடுத்த சில நிமிடங்களில் போராடி தீயை அணைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்