தொழிலாளர்கள் பயத்தை போக்க ஒரு நாள் இரவு முழுவதும் சுடுகாட்டில் தங்கிய எம்.எல்.ஏ..!

Default Image

கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடு அங்குள்ள சுடுகாடு ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார்.

அந்த சுடுகாட்டில் பேய்கள் நடமாடுவதாக கூறப்பட்டதை அடுத்து அவர் இந்த செயலை செய்துள்ளார் . இது குறித்து அவர் கூறும் போது எம்.எல்.ஏ. நாயுடு, அங்கு பேய்கள் அல்லது ‘தீய சக்திகள்’ இல்லை என்று தொழிலாளர்கள் நம்புவதற்கு தூங்கினதாக கூறி உள்ளார்.

சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்கான அவரது முயற்சி மற்றும் கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா போன்ற வசதிகளை செய்ய முயற்சித்தார் ஆனால் தொழிலாளர்களின் பேய் பயத்தால் அந்த பணிகள் தடைப்பட்டு இருந்தன.

சனிக்கிழமை, நாயுடு அவர்கள் இன்னும் சில இரவுகளைக் கழித்திருப்பதாக உறுதி அளித்தார்.எம்.எல்.ஏவின் இந்த செயலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.

“ராம நாயுடுவின் முயற்சிகள் … ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல அற்பமான சடங்குகள் மற்றும் பரவலான மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது போராட்டம். தேசிய கவனத்தை ஈர்க்க வேண்டும் என கூறி உள்ளார்

ராம நாயுடு மூடநம்பிக்கைக்கு எதிரானது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகோலில் இந்த சுடுகாட்டில் மேலும் இரவு நேரங்களை செலவிட முடிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்