தொடர்ந்து அத்துமீறியதால் இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் பலி!

Default Image

பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய படைகள் கொடுத்த பதிலடியில்  கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படைகள் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் மார்ச் 5ஆம் தேதி வரை, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 351 முறை பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதேபோல நேற்றும், இன்று அதிகாலையும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் நிலைகளும், பதுங்கு குழிகளும்  தகர்க்கப்பட்டதுடன், அந்நாட்டுப் படையைச் சேர்ந்த 4 வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மாலை நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலிலும் ஒரு பாகிஸ்தான் வீரர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்