கர்நாடகா துணை முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார், தமது பணிக்காக மேலிடம் நியாயமான பதவியை வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக வரும் புதன்கிழமை குமாரசாமி பதவியேற்க உள்ளார். இதற்காக, பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில், அவருடன் துணை முதலமைச்சராக பரமேஸ்வராவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் பதவியும் ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், வரும் புதன்கிழமை குமாரசாமி மட்டுமே முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளதாக தெரிவித்தார். வியாழக்கிழமையே பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளதால், அதன்பிறகு அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேலும், துணை முதலமைச்சராக தாங்கள் பதவி ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கர்நாடக அரசியலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய தாம் செய்த பணிக்காக, மேலிடம் நியாயமான முடிவை எடுத்து, தமக்கு நீதி வழங்கும் என நம்புவதாகவும், அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி தாவாமல் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு எடியூரப்பா அரசு கவிழ காரணமானவர் டி.கே.சிவக்குமார் என்று கூறப்படுகிறது. இதற்கு பரிசாக அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழஙகப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், துணை முதலமைச்சர் பதவிக்கு மறைமுகமாக விருப்பம் தெரிவித்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…