மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய மனிதப் படுகொலையை அரங்கேற்ற பாஜக அரசு திட்டமிட்டே கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காஷ்மீரில் சாதாரண மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், குலாம் நபி ஆசாத்தின் கருத்து இந்திய ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை இனி ஒரு கணம் கூட சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
தீவிரவாதிகளை முற்றாக ஒழிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று கூறிய ராஜ்நாத்சிங், காஷ்மீரில் பூரண அமைதியை நிலை நிறுத்துவதுதான் மத்திய அரசின் லட்சியம் என்று தெரிவித்தார். தீவிரவாதிகளின் எந்த ஒரு வன்முறைச் செயலுக்கும் பதிலடி பலமாக இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…