தீவிரவாதிகளை காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவோம்! உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Default Image

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று  தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய மனிதப் படுகொலையை அரங்கேற்ற பாஜக அரசு திட்டமிட்டே கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காஷ்மீரில் சாதாரண மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், குலாம் நபி ஆசாத்தின் கருத்து இந்திய ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை இனி ஒரு கணம் கூட சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

தீவிரவாதிகளை முற்றாக ஒழிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று கூறிய ராஜ்நாத்சிங், காஷ்மீரில் பூரண அமைதியை நிலை நிறுத்துவதுதான் மத்திய அரசின் லட்சியம்  என்று தெரிவித்தார். தீவிரவாதிகளின் எந்த ஒரு வன்முறைச் செயலுக்கும் பதிலடி பலமாக இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்