Categories: இந்தியா

தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு…பட்டாசு வெடித்ததால் தந்தை கைது…!!

Published by
Dinasuvadu desk
டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால் அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி காசிப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் கடந்த 1-ம் தேதி தந்தை வாங்கிகொடுத்த பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தான். அப்போது அதிகமான சத்தம் தரக்கூடிய பட்டாசுகளையும், புகை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், சிறுவனை பட்டாசுகளை தவிர்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்காமல் சிறுவன் அதிகம் ஒலி எழுப்பக்கூடிய  பட்டாசுகளை தொடர்ந்து வெடித்துள்ளான். இதனால் வேறுவழியின்றி பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அவனுக்கு பட்டாசுகளை வாங்கி கொடுத்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, டெல்லியில் சர்தார் பஜார், சுப்சி மண்டி, புராரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்த போது சுமார் 650 கிலோ எடையுள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் டெல்லியில் மாசுகட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் உச்சநீதிமன்றம் தற்காலிகமாக இடைக்கால தடை விதித்துள்ளது. அதை மீறியதாக, கடந்த 2 நாட்களில் சுமார் 80 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தைக்கு அதிகபட்ச அபராதத்தொகையும் அல்லது 6 மாத சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago