தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு…பட்டாசு வெடித்ததால் தந்தை கைது…!!

Default Image
டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால் அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி காசிப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் கடந்த 1-ம் தேதி தந்தை வாங்கிகொடுத்த பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தான். அப்போது அதிகமான சத்தம் தரக்கூடிய பட்டாசுகளையும், புகை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், சிறுவனை பட்டாசுகளை தவிர்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்காமல் சிறுவன் அதிகம் ஒலி எழுப்பக்கூடிய  பட்டாசுகளை தொடர்ந்து வெடித்துள்ளான். இதனால் வேறுவழியின்றி பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அவனுக்கு பட்டாசுகளை வாங்கி கொடுத்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, டெல்லியில் சர்தார் பஜார், சுப்சி மண்டி, புராரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்த போது சுமார் 650 கிலோ எடையுள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் டெல்லியில் மாசுகட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் உச்சநீதிமன்றம் தற்காலிகமாக இடைக்கால தடை விதித்துள்ளது. அதை மீறியதாக, கடந்த 2 நாட்களில் சுமார் 80 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தைக்கு அதிகபட்ச அபராதத்தொகையும் அல்லது 6 மாத சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்