Categories: இந்தியா

“திருநங்கைகளுடன் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்” வைரலாகும் போட்டோ..!!

Published by
Dinasuvadu desk
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், மனிதநேய செயல்களையும், பல்வேறு சமூக உதவிகளையும் செய்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது, அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது என பல்வேறு மனிதநேய செயல்களை கவுதம் கம்பீர் செய்து வருகிறார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காகவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ஹிஜ்ரா ஹப்பா எனும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிக்கு கம்பீர் அழைக்கப்பட்டு இருந்தார். இதனை ஏற்று கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் கம்பீர் துப்பட்டா அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து பெண் போன்ற அலங்காரத்துடன் தோன்றி திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார்.
திருநங்கைகளுடன் அவர் இருக்கும் படங்களை கம்பீர் டுவிட்டரிலும் பதிவு செய்து இருக்கிறார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கம்பீரின் இந்த மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக கம்பீர் தனது டுவிட்டர் பதிவில், ஆண் அல்லது பெண்ணாக இருப்பது விஷயமல்ல. மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம். திருநங்கைகளான அபினா அஹிர், சிம்ரன் சாஹிக் ஆகியோர் எனக்கு ராக்கி கயிறு கட்டி என்னை சகோதரராக ஏற்றுக்கொண்டனர். நானும் அவர்களை சகோதரிகளாக பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். நீங்களும் அவர்களை சகோதரிகளாக ஏற்பீர்களா? என்று குறிப்பிட்டுள்ளார்.
கம்பீரின் மனிதநேய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள், அவருடைய பதிவும், பெண் வேடமிட்ட படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago