Categories: இந்தியா

திமுக விற்கு நன்றி தெரிவித்த முதல்வர்..!!

Published by
Dinasuvadu desk

திமுக-விற்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் கடிதம்!

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்!

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னதக கேரளாவை சிதைத்து சென்ற கன மழை காரணமாக கேரளாவின் பலபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

மழை வெள்ளத்தால் தவித்த கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து உதவி கரங்கள் நீட்டப்பட்டது. இதனையடுத்து திமுக கட்சி MLA, MP-கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 1 கோடியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தீர்கள். அத்துடன் அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பி வைத்தீர்கள், உங்களுக்கு கேரள மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் துயரங்களையும், பேரழிவுகளை சந்தித்த போது, தமிழக மக்கள் நிறைய உதவிகளை செய்தார்கள், குறிப்பாக உங்கள் கட்சியினர் (திராவிட முன்னேற்ற கழகம்) பல உதவிகளை வழங்கியுள்ளனர். பேரழிவு காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”  என குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

8 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

16 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago