திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

Default Image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து  காவேரி மருத்துவமனையில் நேரடியாக விசாரித்தார் .
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கருணாநிதி உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தேன் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்