தித்லி புயல் : "3 நாள் கனமழை" வானிலை மையம் எச்சரிக்கை ..!!
தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதால் ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க ஒடிசா அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாநிலம் முழுவதும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU