Categories: இந்தியா

தாஜ்மகாலில் மூஸ்லீம்கள் தொழுகை நடத்த தடை…..!!அமலுக்கு வந்தது..!!

Published by
kavitha

இந்தியாவில் பெரிதும் பேசப்படும் விரும்பப்படும் தாஜ்மஹால் உலக 7அதிசயங்களில் ஒன்று இங்கு தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image result for தாஜ்மஹால் தொழுகை

7 உலக அதிசயங்களில் ஒன்றான டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வருகிறார்கள்.இந்த அதியசம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவருகிறது.

ஆக்ராவில் தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. ஏனென்றால் அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமில்லாமல் தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு  அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.தொழுகை நடத்தும் நாட்களை தவிர மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்களும் கட்டணம் செலுத்தியே உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தொல்லியல் துறைக்கு தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக  மக்களிடையே புகார்கள் எழுந்தன.இந்த புகாரை தொடர்ந்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

இது சர்ச்சையாக மாறிய உச்சநீதிமன்றத்துக்கு சென்றது.  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகை நடத்த உத்தரவிட்டு மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை தொல்லியல் துறையினர் அமல்படுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தங்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள்  பூட்டி விட்டனர்.இதனால் தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டது.

தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைக்கு தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் அலிசையது இப்ராகிம் உசைன் ,இமாம் சையது சாதிக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்கவில்லை.நாங்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவவை அமல்படுத்தியுள்ளோம் என்று கூறினர்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago