"தம்பிக்கு மனைவியாக இரு" மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்…!!

Default Image
உத்தரப்பிரதேசத்தில் தன்னுடைய மனைவியை தம்பிக்கு மனைவியாக இருக்க சொல்லி மனைவியை கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி இவருக்கு வயது23 ஆகும்.இவருடைய கணவர் விஷால்.இந்த தம்பதிகள் நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்த போதும் விஷாலுக்கு அவரின் தம்பி மனைவி சோனு மீது காதல் கொண்டார். அதே போன்று தம்பிக்கோ அண்ணன் மனைவி லட்சுமியின் மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டுள்ளது.  இதனால், அண்ணனும்  தம்பியும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
இந்நிலையில் அண்ணன் விஷாலின் மனைவி லட்சுமியை தம்பிக்கும், தம்பி யோகேந்திராவின் மனைவி சோனுவை அண்ணனுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.தம்பியின் மனைவி சோனு தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற விரக்தியில்  தம்பி யோகேந்திராவுடன் சேர்ந்து விஷால் தாலி கட்டிய தன்னுஇடைய மனைவி லட்சுமியை கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் தகவலறிந்த போலீசார் விஷால் மற்றும் யோகேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தம்பிக்கு மனைவியாக இருக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம்  பரபரப்பையும் , அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்