தமிழக விவசாயிகளும் எங்களது சகோதரர்கள் தான்! தேவகவுடா

Default Image

முன்னாள் பிரதமரும், கர்நாடகாவை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா  தமிழக விவசாயிகளும் தங்களது சகோதரர்கள் தான் என்று கூறியுள்ளார்.

கோயில் திருவிழாவில் பங்கேற்க ஓசூர் வந்த அவர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பேட்டியளித்த தேவகவுடா, காவிரி பிரச்சனையில் கர்நாடக முதலமைச்சரும் தமிழக முதலமைச்சரும் இணைந்து பேசி தீர்க்க வேண்டும் என்றார்.

கர்நாடகாவில் கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு குறித்து யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என குறிப்பிட்டார். கனமழை காரணமாக தமிழகத்தின் பங்கீட்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான தண்ணீர் காவிரியில் செல்வதாக தேவகவுடா தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்