தமிழகத்தில் வாஜ்பாய் வழியில் கூட்டணி தர்மம் : மோடி அழைப்பு..!!

Default Image

மக்களவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி சேர, தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம் ஆகிய 5 மக்களவை தொகுதி பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது மக்களவை தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்றார்.

பழைய நண்பர்கள் உள்பட அனைவருக்கும் கதவுகள் திறந்திருப்பதாக மோடி தெரிவித்தார். அவருடைய பேச்சு தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்