தன்னாட்சி அமைப்புகளை காங்கிரஸ் அவமானப்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!

Default Image

உச்ச நீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை காங்கிரஸ் அவமானப்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பா.ஜ.க தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் உரையாடினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் சந்தேகத்தை உருவாக்கியதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வரும்போது அந்தக் கட்சி மவுனம் காப்பதாக விமர்சித்தார். மேலும் ராணுவம், மத்திய தணிக்கை குழு உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் அவமானப்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்