தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளை மீண்டும் செயல்பட வைப்பதற்கு வாய்ப்பு!

Default Image

இஸ்ரோ தலைவர் சிவன் இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைகோளை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8  ராக்கெட் மூலம் விண்ணில் இஸ்ரோ செலுத்தியது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், இரண்டாம் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோளுக்கும் இஸ்ரோவுக்கும் இடையே தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

செயற்கைகோளுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள சிவன், செயற்கைக்கோளை இயங்க வைப்பதற்கான வாய்ப்புகள் தற்போதும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்