டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வீதிக்குப் போராட வந்த ஆம் ஆத்மி கட்சியினர்!

Default Image

இன்று 8வது நாளாக டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக நேற்று மாலை பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் நாடாளுமன்ற வீதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் முன் அனுமதி பெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பேரணி காரணமாக, கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்