Categories: இந்தியா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5வது நாளாக ஆளுநர் இல்லத்தில் தர்ணா போராட்டம்!

Published by
Venu

5வது நாளாக இன்று ஆளுநர் இல்லத்தில்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தம் வீட்டை மறந்தது ஏன்?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் டெல்லி துணை நிலை ஆளநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில் நான்காவது இரவை சோபாவில் தூங்கியபடி கழித்தனர். சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டில் இருந்து புத்தகங்கள், இன்சுலின் ஊசிகள், மருந்து மாத்திரைகள், உணவு, மாற்று உடைகள் போன்றவை கொடுத்து அனுப்பப்படுகின்றன.

எதற்காக இந்த தர்ணா போராட்டம்? ஆளுநர் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுப்பதில்லை என்று கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். என்ன கோரிக்கைகள்?

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். பணிக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கும் வராத அதிகாரிகள் மீது அத்தியாவசிய சேவைகள் சட்டமான எஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேசன் கார்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் போன்றவை முக்கியக் கோரிக்கைகளாகும்.

நான்கு மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது.ஆளுநரும் மத்திய அரசும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தூண்டி விடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டெல்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டுகிறது. டெல்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள கெஜ்ரிவால், இப்பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago