டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி !8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை! ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

Published by
Venu

 டெல்லி உயர் நீதிமன்றம் இன்று, காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து அதிரடி உத்தரவிட்டது.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரஸானா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல் போனார். அதன்பின் 7 நாட்களுப்பின், அப்பகுதியில் உள்ள காட்டில் சடலமாக, சிறுமி உடல் மீட்கப்பட்டது.

விசாரணையில் அந்தச் சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 8வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து சில இந்தி, ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள் சிறுமியின் புகைப்படம், அடையாளம், பெயர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்தது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதிகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்கள் உள்ளிட்டவற்றை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவது அந்தரங்க, தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும்.

அதிலும் போஸ்கோ சட்டப்படி குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் பெயர்கள், அடையாளம், புகைப்படம், பள்ளியின் பெயர், முகவரி, உள்ளிட்டவற்றை வெளியிடக்கூடாது என்பது தெரியாதா என்று கண்டித்தனர்.

இதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு செய்தி வெளியிட்ட 12 ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வந்தது.

அப்போது, நோட்டீஸ் அனுப்பப்பட்ட 12 ஊடகங்களில் 9 ஊடகங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினார்கள். அவர்கள் வாதிடுகையில், சட்டத்தில் இதுபோன்ற விதிமுறைகள் இருப்பது தங்களுக்கு தெரியாது, பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம்,பெயர் வெளியிடுவது குறித்து அறிந்திருக்கவில்லை.

அந்தச் சிறுமி இறந்ததால், அவர் பெயரை வெளியிடலாம் என்று சட்டம் குறித்துத் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். இதில் தவறு நடந்துவிட்டது. எனத் தெரிவித்தனர்.

ஆனால், இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. சிறுமியின் புகைப்படம், பெயர், அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும், நீதிமன்றம் மூலம் அந்த பணம் ஜம்மு,காஷ்மீர் பாதிக்கப்பட்டவர்கள் நலநிதிக்கு வழங்கப்படும்.

மேலும், காஷ்மீர் சிறுமியின் அடையாளங்கள், பெயர், புகைப்படம் ஆகியவற்றைப் பொதுவெளியில் வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago