Categories: இந்தியா

டெல்லியில் பார்வையற்ற மாணவர்களை கடும் குளிரில் தெருவில் விட்டுள்ள கொடுமை.! ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கண்டனம்.!!

Published by
Dinasuvadu desk

தலைநகர் டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச இல்லம் ஒன்று இயங்கி வந்தது. அந்த இல்லத்தை, டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சமீபத்தில் இடித்தனர். இதன் காரணமாக, அந்த இல்லத்தில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம், பீகார், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பார்வையற்ற மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது அவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற பொதுவெளியில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்களுடைய பிரெயில் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை தொலைக்க நேரிட்டுள்ளது. தற்போது டெல்லியில் நிலவும் கடும் குளிரில் அவர்கள் பல்வேறு சிரமங்கள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.

 

 

டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இந்த செயலை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கண்டித்துள்ளது. பார்வையற்றவர்களின் சிரமங்களை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல், பொறுப்பற்ற செயல் இது என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உடனடியாக அவர்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க டெல்லி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தியுள்ளதோடு, தனது குழு ஒன்றையும் நேரில் அனுப்பி, தனது ஆதரவையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளது

Published by
Dinasuvadu desk

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

3 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

4 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

9 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

20 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago