டெல்லியில் காளி வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்!

Default Image

காளி போல் வேடமிட்டு டெல்லியில் சுற்றிய நபரை கேலி செய்து, குத்திக்கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த களுவா என்பவர், அங்குள்ள ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். காளியின் தீவிர பக்தரான இவர், அடிக்கடி காளிபோல வேடமணிந்து, கல்காஜி பகுதியில் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் காளி போல கருப்பு உடை, கால் கொலுசு என வேடமணிந்து சுற்றித்திருந்த அவரை, இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு களுவா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சரிமாரியாக தாக்கிய இளைஞர்கள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் 4 இளைஞர்கள் மற்றும் 3 சிறுவர்களை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்