டீ விற்று பிழைக்கும் ஆசிய பதக்கம் வென்ற இந்திய வீரர்..!!

Default Image

டீ கடையில் டீ ஆத்தும் ஆசிய விளையாட்டு பதக்க வீரர்…

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஹரிஷ் குமார், தனது வாழ்வாதாரத்திற்காக டீ கடையில் டீ விற்று வருகிறார்.டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் தனது தந்தை நடத்திவரும் டீக்கடையில் அவருக்கு உதவியாக இருந்துகொண்டே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் இடம் பெற்றிருந்தார். ஹரிஷ்குமாரின் தந்தை டீக்கடை நடத்திவரும் நிலையில், பயிற்சிக்கு இடையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தனது தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்வதாக அவர் கூறுகிறார். ஹரிஷ்குமாரின் கடின உழைப்பிற்கு தொடர்ந்து வெற்றிகள் கிட்டும் என பலரும் வாழ்த்திவருகின்றனர்.இவரின் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்