ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி..!

Default Image

கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன் ஜெயநகர் தொகுதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

16 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி பா.ஜ.க. வேட்பாளர் பி.என்.பிரகலாதை விட 2 ஆயிரத்து 889 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். வெற்றி பெற்றுள்ள சவுமியா ரெட்டி மாநில அமைச்சர் ராமலிங்கா ரெட்டியின் மகளாவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்