ஜியோவை விரட்டியடிக்க இணைக்கின்றது வோடபோன் மற்றும் ஐடியா..!!

Default Image

டெல்லி:

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புகளான ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள்  தற்போது ஒன்றாக இணைந்துள்ளன.

இந்தியாவில் டேட்டா உலகின் பெரிய சந்தை நிறுவனமாக  இனி ஐடியாவும் , வோடாபோனும் தான்.120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியா தான் டேட்டா உலகின் பெரிய சந்தையாக திகழ்கிறது.இந்த போட்டியில், தற்போது ஒன்றாக சேர்ந்து ஓட இருக்கிறது ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.இரு நிறுவனம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இணைப்பு சாத்தியம் ஆகியுள்ளது.

இதில் வோடபோன் தான் அதிகமாக 45.2% சதவிகித பங்கை பெற்றுள்ளது. ஐடியாவின், ஆதித்யா பிர்லா நிறுவனம் 26% பங்குகளை பெற்றுள்ளது.தற்போது  இந்தியாவிலேயே மிக பெரிய நிறுவனம், ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம்தான்.இந்த இரண்டு நிறுவனத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 48 கோடி பேர்  வாடிக்கையாளராக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்தியா முழுவதும்  இவர்கள்தான் பல்வேறு இடங்களில் அதிக தொலைத்தொடர்பு டவர்களை வைத்து இருக்கிறார்கள்.

தற்போது ஜியோ அனைத்து டேட்டா நிறுவனத்திற்கும் போட்டியாக இருந்த சூழலில் தற்போது ஐடியா , வோடபோன் இணைப்பு என்பது ஜியோவுக்கு முக்கிய போட்டியாக இருக்கும் என கருதப்படுகின்ற்றது.இரண்டும் தற்போது இணைந்துள்ளதால் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக மாறியுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்