புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் புதுவை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் 2–வது மாடியில் மருத்துவ ஆவண பதிவேட்டு அறை உள்ளது. இங்கு நோயாளிகளின் பற்றிய பதிவேடுகள் சேகரித்து வைக்கப்படும்.
இதன் அருகில் உள்ள அறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஆவண பதிவேட்டு அறையில் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிட போராடி தீயை அணைத்தனர். அங்கு இருந்த கோப்புகள் அருகில் உள்ள அறைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டன. அந்த அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தால் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…