Categories: இந்தியா

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு..!

Published by
Dinasuvadu desk
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் அவுரசங்சேப் என்ற பகுதியில் ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரின் இல்லம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ளது.
விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்,  புல்வமா சென்றிருந்த சமயத்தில், பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி சமீர் டைகருக்கு எதிராக நடைபெற்ற  என்கவுண்டர் சம்பவத்தில்  கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரும் இடம் பெற்று இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அமைதி நடவடிக்கையின் துவக்கமாக கடந்த ஒரு மாத காலமாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திவைக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இந்த வேளையில், பயங்கரவாதிகளின் குற்றச்செயல்பாடுகள் அதிகம் அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச்சென்ற உமர் பயாஸ் என்ற இளம் ராணுவ அதிகாரி பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டதும் மறுநாள், துப்பாக்கிக்குண்டுகள் காயத்துடன் ராணுவ அதிகாரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் நினைவிருக்கலாம்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago