ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காஷ்மீரில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்றார்.மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. இந்தநிலையில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அங்கு ஆட்சியமைக்க நேற்று முன்தினம் உரிமை கோரின. ஆனால் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். கட்சிகளுக்கிடையில் குதிரை பேரம் நடைபெற்றதாக கிடைத்த புகாரையடுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
DINASUVADU.COM
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…