Categories: இந்தியா

ஜம்மு-காஷ்மீர்:எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. !ராணுவம் அதிரடி..!

Published by
kavitha

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர், அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் குப்வாரா மாவட்டத்தின் தாங்தார் ((Tangdhar)) கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக, தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றுள்ளனர். இதை கண்டறிந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தியதால், அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் 5 தீவிரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், முன்கூட்டியே நள்ளிரவு நேரத்தில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என கருதும் ராணுவத்தினர், தாங்தார் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago