ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

Default Image
காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17–ந்தேதி நிறுத்தி வைத்தது.
பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை மேற்கொண்டது. மற்றபடி பெரும்பாலான நாட்களில் பாதுகாப்பு படையினர் அமைதி காத்து வந்தனர்.இந்தநிலையில் ரமலான் மாதம் முடிவடைந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களும் நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில், பந்திப்போரா பகுதியில்,  பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியதோடு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்