ஜம்மு காஷ்மீரில் ஆற்றில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி தன் உயிரை இழந்த வாலிபர்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஆம்வாரி ஜீரோ பாலத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த ஷகிர் வானி என்ற வாலிபர் விரைந்து செயல்பட்டு ஆற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளார்.
ஆனால், சிறுவனை காப்பாற்றி கரை சேர்த்த சில வினாடிகளில் ஷகிரை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் அவர் சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஷகிர் பி.யு.சி படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிதும் அஞ்சாமல் சிறுவனின் உயிரை காப்பாற்ற தன் உயிரை இழந்த 16 வயது சிறுவனின் உடலுக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.