Categories: இந்தியா

செல்ஃபி மோகத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 தமிழர்கள்..!

Published by
Dinasuvadu desk

தமிழகத்தினை சேர்ந்த 4 பேர் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.  இதற்காக வடக்கு கோவா வந்த அவர்கள் ஆகுவாடா கோட்டை அருகே சிகுரிம் பீச் பகுதிக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.

அவர்கள் பாறைகள் அதிகம் நிறைந்த பகுதியில் இருந்தபடி தங்களது போன்களில் படம் பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.  திடீரென உயரே எழுந்து வந்த அலை ஒன்று பாறையில் அமர்ந்த ஒருவரை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது.  அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து விட்டார்.

அவர் சசிகுமார் வாசன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இதேபோன்று தமிழகத்தில் இருந்து 8 பேர் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  அவர்கள் கடந்த சனிக்கிழமை வடக்கு கோவாவின் பாகா பீச்சிற்கு சென்றுள்ளனர்.

அவர்களில் 3 பேர் நீர் சூழ்ந்த பாறை பகுதிகளில் இருந்தபடி தங்களது மொபைல் போன்களில் செல்ஃபி எடுத்துள்ளனர்.  அவர்களை நோக்கி சீற்றத்துடன் வந்த கடல் அலை ஒன்று மூவரையும் இழுத்து சென்றுள்ளது.

இதில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.  ஆனால் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் (வயது 28) என்பவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து விட்டார்.

கோவா பீச்சில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தினை சேர்ந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

கோவா கடற்கரை பகுதியில் நீச்சல் அடிப்பதற்கு ஜூன் 1ந்தேதியில் இருந்து 4 மாதங்களுக்கு தடை விதித்து கோவா அரசு கடந்த மாதம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago