செம்ம ஷாக்…நவம்பர் 30-க்கு பிறகு ரேசனில் இலவச அரிசி,கோதுமை திட்டம் கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு!

Published by
Edison

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் ரேசனில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் உணவு தானியம் வழங்கும் திட்டம் வரும் நவ.30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் பரிசீலனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ‘பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா’ எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.அதன்படி,இத்திட்டத்தின் வாயிலாக ரேசன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக,இத்திட்டத்தின் மூலம் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல்-ஜூன் 2020) என்ற கணக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டம் கொரோனா நெருக்கடி தொடர்ந்ததால், மேலும் ஐந்து மாதங்களுக்கு ஜூலை-நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தொடங்கிய பிறகு,இத்திட்டம் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு (மே-ஜூன் 2021) நீட்டிக்கப்பட்டு,பின்னர் மேலும் ஐந்து மாதங்களுக்கு (ஜூலை-நவம்பர் 2021) நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில்,பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதன்ஷூ பாண்டே கூறுகையில்,”தற்போது பொருளாதாரம் புத்துயிர் பெற்று மீண்டு வருவதாலும், உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக இருப்பதாலும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) மூலம் இலவச உணவு தானிய விநியோகத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை”, என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

29 minutes ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

34 minutes ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

1 hour ago

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

3 hours ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

4 hours ago