தொடர் வழிப்பறி சம்பவங்கள் எதிரொலியாக சென்னை முழுவதும் 2ம் நாள் நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 564 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி சம்பவங்களை தொடர்ந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் ஜெயராம், சாரங்கன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாளான நேற்று முன்தினம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 3,081 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சந்தேகத்தின் பேரில் 442 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும், 109,110 பிரிவின் கீழ் 95 பேர் என மொத்தம் 564 ேபரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 53 பேரையும் போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…