செசல்ஸ் நாட்டில் இந்தியா கடற்படை தளம் அமைக்கும் திட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்நாட்டின் அதிபர் டேனி ஃபயூரே (Danny Faure) அறிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு நாடுகள் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள செசல்ஸ் நாட்டின் அசம்சன் தீவுப் பகுதியில் ராணுவ தளம் ஒன்றை அமைக்க, இந்தியா சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டத்துக்கு செசல்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைவிடப்படுவதாக கூறியுள்ள செசல்ஸ் அதிபர் டேனி ஃபயூரே, சொந்த செலவிலேயே கடற்படை தளத்தை அசம்சன் தீவில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…