சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஒருமனதாக மீண்டும் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயல்படலாம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணி வைப்பதா இல்லையா என்ற கொள்கை முடிவு எடுக்க மூத்த உறுப்பினர்கள் பலரும் காரசார விவாதம் நடத்தினர்.இறுதியாக காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும், புரிந்துணர்வுடன் செயல்படலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியில் சீதாராம் யெச்சூரியின் கருத்துக்கு பெருமளவு ஆதரவு கிடைத்ததையடுத்து அவர் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி மக்களவைத் தேர்தலில் பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையும் வீழ்த்துவதே முக்கியம் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…