சி.பி.எஸ்.இ. வினாத்தாள் விவகாரம் …!குற்றம்சாட்டை ஒப்புக் கொண்டதால் ஆசிரியர் உள்பட மூவர் கைது…!

Default Image

விசாரணை அதிகாரிகள்  சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றம்சாட்டை ஒப்புக் கொண்ட ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள டிஏவி (DAV)சென்டனரி பப்ளிக் பள்ளியில் 8 ஆண்டுகளாக பொருளியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராகேஷ் குமார் சர்மா. இவர் அதே மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளியில் தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு சற்று முன்னதாகவே கட்டுக்களைப்பிரித்து கணிதப் பாடத்துக்கான வினாத்தாள்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதாக டெல்லி குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் 3 நாட்களுக்கு முன்னதாக பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்திலும் ராகேஷ் குமார் சர்மா உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்