தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் அரசு அதன் தீவிரத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்கள் நிதிய்யுதவி அளிக்கலாம் என அரசின் தரப்பிலிருந்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலதரப்பினரும் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் இதை விமர்சனம் செய்யும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழுவின் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் , மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு சிலைகள் அமைப்பதிலும், புல்லட் ரயில் விடுவதிலும், சுயவிளம்பரத்திலும் மக்களின் வரிப் பணத்தை வீணடித்துள்ளதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் அவர், பிரதமர் மோடி மக்கள் பணத்தை வீணடித்துவிட்டதால் சுகாதாரத்தை பலப்படுத்த அரசிடம் பணம் இல்லாமல் போய்விட்டது என்று தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…