வணிக பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்களை போலிசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரியில் வீட்டு உபயோக சிலிண்டரை முறை கேடாக பதுக்கி வைக்கப்பட்டு வணிக பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக கவர்னர்க்கு புகார் வந்ததையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலிசார் பல்வேறு பகுதி ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கன்னியக் கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒட்டல் பின்புறத்தில் வீட்டு உபயோக மற்றும் கமர்ஷியல் காஸ் சிலிண்டர்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப் பட்டது.
விசாரணையில் விட்டு உபயோக சிலிண்டர்களை அப்பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும் , கார்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மற்றும் ஒட்டல் உரிமையாளர் வீட்டில் அவரது நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்த 81 விட்டு உபயோக காஸ் சிலண்டர் களை பறிமுதல் செய்து ராம், மற்றும் தன கோடி ஆகிய இருவரை கைது செய்து இதற்கு பயன்படுத்திய ஒரு டாடா ஏசி வாகனம், 5 மோட்டார் பைக்குகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…