சிறிய ரக விமானம் மும்பையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கட்டுமானப் பணிகள் மும்பையின் காட்கோபர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இன்று நண்பகல் பலத்த சத்தத்தோடு சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து திடீரென தீப்பிடித்தது.
தீயணைப்புத் துறைக்கு இதைக் கண்டு அஞ்சியவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தவும், அதனுள் இருப்பவர்களை மீட்கவும் போராடினர். இருப்பினும் 5 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டதாக மும்பை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மும்பையின் ஜுஹு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில், விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இருவர் விமானி என்றும், இருவர் விமானப் பராமரிப்பு பொறியாளர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் உயிரிழந்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. விமானத்தில் இருந்து விபத்துக்கான காரணம் கண்டறியும் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…