சிறிய அளவிலான தொகை வைத்து ரம்மி விளையாடினால் சூது இல்லை : உயர்நீதிமன்றம் கருத்து
டெல்லி : டெல்லி கிளப் ஒன்று அங்கு வேலைபார்த்த ஊழியரான சுரேஷ் குமார் என்பவரை வேலையிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அவர் கிளப்பை மாபியா கும்பல் ஒன்று இயக்குவதாக உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், அந்த கிளப்பில் சூதாட்டம் நடப்பதாகவும் புகார் அளித்தார்.
இதை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், கிளப்பில் சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடினால் அது குற்றமல்ல என கூறியது. மேலும் பொய் வழக்கு தொடர்ந்ததற்காக சுரேஷ் குமாருக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சுரேஷ் குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகி ஜே.மேத்தா, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தார்.
அவர் தனது தீர்ப்பில் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு சரியான கருத்தையே கொண்டுள்ளது என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் கூற்றுப்படி, ஒரு கிளப் வளாகத்தில் வெறும் ஒரு சில அணாக்கள் முதல் சிறிய தொகை வரையிலான ரூபாய் வரை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது’ என தீர்ப்பளித்தார்.