சாரதா சீட்டு மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாரதா நிதி நிறுவனம் மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 17லட்சம் பேரிடம் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. சாரதா நிறுவனத்துக்காக வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் நளினி, அதற்காகப் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினிக்கு 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத்துறை முதல் சம்மன் அனுப்பியது.
அதுமுதல் 3முறை சம்மன் அனுப்பியும் நளினி இதுவரை ஆஜராகவில்லை. நான்காவது முறையாக இன்று அனுப்பியுள்ள சம்மனில் ஜூன் 20 பகல் 11மணிக்குக் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…