சிதம்பரம் மனைவி நளினிக்கு சம்மன்..!

Default Image

சாரதா சீட்டு மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாரதா  நிதி நிறுவனம் மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 17லட்சம் பேரிடம் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தவில்லை.  சாரதா நிறுவனத்துக்காக வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் நளினி, அதற்காகப் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினிக்கு 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத்துறை முதல் சம்மன் அனுப்பியது.

அதுமுதல் 3முறை சம்மன் அனுப்பியும் நளினி இதுவரை ஆஜராகவில்லை. நான்காவது முறையாக இன்று அனுப்பியுள்ள சம்மனில் ஜூன் 20 பகல் 11மணிக்குக் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்