சிக்கலில் ரஜினியின் பாபா முத்திரை! உரிமை கொண்டாடி தனியார் நிறுவனம் வழக்கு …….

Default Image

அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.
விரல்களை மடக்கி ‘பாபா’முத்திரை காட்டும் ரஜினி, இதை அந்த படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில், மேடையில் பொறிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழகம் முழுவவதும் உள்ள ரஜினி ரசிகர்களும், அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை, தயாரித்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த முத்திரை, தங்கள் நிறுவனத்தின் லோகோ போலவே இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் மும்பையை சேர்ந்த தனியார் தொழில்நுட்ப நிறுவனம், உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், இது தொடர்பாக நடிகர் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்த நிறுவனம் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்