சிக்கலில் சிக்கிய முதலமைச்சர் …!தடையை மீறியதால் முதலமைச்சர் உள்பட 16 பேருக்கு பிடிவாரண்ட் …!நீதிமன்றம் அதிரடி உத்தரவு  

Default Image
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு துர்ஹமபாத் நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசு கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில்  பாப்லி என்ற அணையை நிறுவியது.தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (தற்போது ஆந்திராவின் முதலமைச்சர் ) கடந்த  2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் மகாராஷ்டிரா அரசு அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில்  இந்த வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் ஆஜராகாததால் நேற்று  ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு துர்ஹமபாத் நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்