Categories: இந்தியா

சாமி ஊர்வலத்துக்காக மூடப்பட்ட விமான நிலையம்….!!

Published by
Dinasuvadu desk

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.

பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள சிலைகளை ஆண்டுக்கு இருமுறை (அக்டோபர்-நவம்பர், மார்ச்-ஏப்ரல்) அங்குள்ள சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று புனித நீராட்டுவார்கள். பின்னர் சாமி சிலைகள் மீண்டும் கோவிலுக்கு திரும்பும்.

இந்த கடற்கரை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ளது. இதனால் விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாக சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டின் புனித நீராட்டு விழாவையொட்டி பத்மநாபசுவாமி கோவில் சிலைகள் நேற்று மாலை 4 மணிக்கு விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாக ஊர்வலமாக சென்றது. பின்னர் நீராட்டு முடிந்து 9 மணிக்கு விமான நிலையம் வழியாக மீண்டும் கோவிலுக்கு திரும்பியது. இதையொட்டி முன்னேற்பாடாக விமான நிலையத்தை 5 மணி நேரம் மூடுவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை மற்றும் ஷார்ஜா நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் இரு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

1932–ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்தே பல நூற்றாண்டு காலமாக இதே பாதையில் பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலம் நடைபெற்று வருவதால் வருடத்தில் 2 முறை இதுபோல் விமான நிலையம் 5 மணி நேரத்துக்கு மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago