சாதாரண மனிதர்களின் குறிப்பிட்ட அடையாளங்களை ஆதார் விதியின் படி பதிவு செய்யப்படாது!ஆதார் ஆணையம் விளக்கம்

Published by
Venu

ஆதார் ஆணையம் (UIDAI) ,ஆதார் சட்டத்தின் படி தனி நபர்களின் சாதி, மத, இன அடையாளங்களை பதிவு செய்வதில்லை, எனவே இத்தகைய மக்கள்தொகையியல் விவரங்களைக் கொண்டு பாகுபாடு செய்வதற்குப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதி செய்துள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

ஆதார் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதியின் பிரமாணங்களை சந்திராசூட் மறுவார்த்தைகளில் தெரிவித்தார்.

இந்நிலையில்  மக்கள்தொகையியல் தேவைகளில் இனம், மதம், சாதி, உள்ளிட்ட அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இதைக் கொண்டு பாகுபாடு செய்வதும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. இந்த விவரங்களை விலக்குதல் மூலம் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது, என்று கூறியுள்ளது.

ஆகஸ்ட் 2017-ல் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையின் போது நீதிபதி சந்திராசூட் தனியுரிமை, அந்தரங்கத் தகவல்கள் என்பது வாழ்க்கையின் உள்ளடங்கிய பகுதி என்றும் சுதந்திரம் என்பது நம் நாட்டு அரசியல் சட்டத்தில் புனிதமாக்கப்பட்ட அங்கம் என்றும் கூறினார்.

அதாவது தனிமனித அந்தரங்கத் தகவல்கள் என்பது இயல்பான உரிமை, அரசு இதில் உள்ளே நுழைய முடியாது, அனைத்துத் தனிநபர்களுக்கும் தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான சம உரிமை உள்ளது.

அதாவது தனியுரிமை என்பது அடிப்படை உரிமையா என்ற விவாதங்களின் போது நீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியிருந்தது.

ஆனால் ஆதார் ஆணைய வழக்கறிஞர் திவேதி மக்கள்தொகையியல் சார்ந்த விவரங்களான பெயர், வயது உள்ளிட்டவைகள் மீது தனியுரிமையை யாரும் கோர முடியாது என்றார்.

திவேதியின் பிரமாணங்களை தன் மொழியில் கூறிய சந்திரா சூட், அதில் மக்கள்தொகையியல், விருப்பத் தெரிவு மக்கள் தொகையியல், பயோமெட்ரிக்ஸ், மையமான பயோமெட்ரிக்ஸ்களான கைரேகை, கண்விழிப் பதிவு ஆகியவை 4 அடுக்கு அடையாளங்களாகும் என்றார்.

இதில் மைய பயோமெட்ரிக்ஸ் விவரங்களை ஆதார் ஆணையம் பகிரவில்லை என்று திவேதி கூறியுள்ளார்.

ஆனால் திவேதியின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி, மைய சேமிப்பு வசதியில் தனிநபர் குறித்த தகவல்கள் சேர்க்கப்படுவது பற்றி மக்கள் இன்னமும் அச்சப்படுகின்றனர் என்றார்.

இதற்கு திவேதி, “உண்மையான பயங்கள் குறித்துதான் எங்களுக்குக் கவலை. தண்ணீரைக் கண்டே பயப்படுபவர்கள் குளத்தில் குதிக்க முடியாது. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதிலுரைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

25 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago